
நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை காலை நெல் நடும் பணிக்காக 70-க்கும் மேற்பட்டோர் பயணித்தபோது, சுமை தாங்காமல் படகு நதியின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்ததில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
மீட்புப் பணிகளில் இதுவரை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததும், பழமையான படகில் அதிக ஆட்களை ஏற்றியதுமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.