
தமிழகத்தில் மதுபான சில்லறை விற்பனையை மீண்டும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.