
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு போன்ற கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்து அமைச்சரவைப் பிரிவு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடைகள் இரவு 9 மணிக்கும், திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கும், உணவகங்கள் இரவு 11 மணிக்கும் அடைக்கப்பட வேண்டும் எனவும், திருமணங்களில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளில் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு வாகனங்களின் எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு, அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் 3 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.