
ஜெயா தொலைக்காட்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான குஷ்பு தொகுத்து வழங்கும் ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியின் புதிய சீசன் நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது.
இந்த முறை 3 அணிகளுக்கு இடையிலான போட்டியாக உருவாகியுள்ள இந்நிகழ்ச்சியில் இறுதியில் ரூ.10 லட்சம் வரை வெல்லும் வாய்ப்புள்ளது.
இறுதிச் சுற்றில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய பிரத்யேக சவால் இடம்பெறவுள்ளது.