
வெளிநாட்டு நன்கொடைகளை முறைப்படுத்தும் எஃப்சிஆர்ஏ திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (JPC) ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு இன்று தீர்மானம் முன்மொழிந்தது.
இந்தக் குழுவில் மக்களவையின் 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையின் 10 உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என அலுவல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு தனது அறிக்கையை 2026-ம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.