
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில், கூட்ட நெரிசல் காரணமாக திருமாவளவன் தனது உரையை முன்கூட்டியே முடித்துக்கொண்டார்.
தமிழக அரசியல் களத்தில் விசிகவும் தவெகவும் இணைந்தே பயணிக்கும் என்று குறிப்பிட்ட திருமாவளவன், விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும் என தொண்டர்களிடம் பேசினார்.
மாநாட்டின் போது மேடையை தொண்டர்கள் ஆக்கிரமித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, கூட்டத்தில் சிக்கி மயக்கமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.