
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 போலீஸார் உயிரிழந்தனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர்.
ஹங்கு மாவட்டத்தில் நடந்த இந்த மோதலில் தீவிரவாதிகள் தரப்பில் 15 பேர் உயிரிழந்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்கவா முதல்வர் சுகைல் அப்ரிதி கண்டனம் தெரிவித்து, விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.