
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் ஊராட்சித் தலைவர் மகாராஜன் (55), குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் செங்கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என இசக்கி பாண்டியன் என்பவர் புகார் கூறிய நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்துள்ளது.
படுகாயமடைந்த மகாராஜன் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில், வள்ளியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.