
கிளாஸ்கோவில் நடைபெறும் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் 13 நிமிடம் 24.95 வினாடிகளில் வெண்கலம் வென்றார்.
இதன் மூலம் ஒரே காமன்வெல்த் தொடரில் இரண்டு தடகளப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 39 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், 10,000 மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங் ஏற்கனவே வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.