
துபாய் நகர மையத்திலிருந்து 25 மைல் தென்மேற்கே அமைந்துள்ள ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் வெறும் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது 7 வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாசாவின் தெர்மல் படங்களின்படி, ஜெபெல் அலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் பரிமாற்றக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெடிச் சத்தம் கேட்ட நேரத்தில் பலத்த அதிர்வு இருந்ததாக அருகிலுள்ள அல் ஃபுர்ஜான் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.