
சான் டியாகோவில் உள்ள மிராமர் கடற்படை விமான தளத்திற்கு அருகே அமெரிக்காவின் F-35B ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் தரையில் மோதுவதற்கு முன்பே விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகவும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விமானம் பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.