
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
பஸ் கண்டக்டராக இருந்து திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த அவரது போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளன.
சுயசரிதை புத்தகத்துடன், அதனைத் திரைப்படமாக உருவாக்குவது குறித்தும் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.