
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலத்தில் நேற்று நள்ளிரவு நடந்த சாலை விபத்தில், திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மாணவர்கள் சென்ற கார், சாலைப் பணிகள் நடைபெற்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின் பகுதியில் அதிவேகமாக மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.