
இமயமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் திறந்தவெளியில் கழிக்கும் சிறுநீர், பனிப்பாறைகளின் வெப்பநிலையை உயர்த்தி அவை வேகமாக உருகுவதற்குக் காரணமாக இருப்பதாக Regional Environmental Change இதழ் எச்சரித்துள்ளது.
சிறுநீரில் உள்ள யூரியா, அம்மோனியா மற்றும் சோடியம் உப்புக்கள் பனியின் கட்டமைப்பைச் சிதைப்பதுடன், நீர்நிலைகளில் கலந்து குடிநீரின் தரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் வெள்ளத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.