
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது டால்க் பவுடர் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட 76,000 வழக்குகளை முடிக்க ரூ.52,668 கோடி இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையில் முதற்கட்டமாக 2027-ல் ரூ.29,000 கோடியும், மீதமுள்ள தொகையை 2028-லும் வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வர, வழக்கு தொடர்ந்தவர்களில் குறைந்தது 95 சதவீதத்தினர் இதற்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.