
அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் இந்திய அணி 8 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், சுமாரான ஃபீல்டிங் செய்யும் வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் இந்திய வீரர்கள் 10 கேட்ச்களைக் கோட்டைவிட்டதைச் சுட்டிக்காட்டிய கவாஸ்கர், கேப்டன் பலவீனமான ஃபீல்டர்களை மைதானத்தில் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்றார்.
ஆகஸ்ட் மாதம் பிசிசிஐ அணி குறித்து ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், பேட்டர்கள் தங்களின் இமேஜிற்காக விளையாடாமல் பந்தின் தகுதிக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.