
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் ரூ.12 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
நள்ளிரவில் கண்காணிப்பு கேமரா மீது ஸ்பிரே அடித்து மறைத்த கொள்ளையர்கள், வெல்டிங் கட்டரைப் பயன்படுத்தி இயந்திரத்தை உடைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.