
மே 13 முதல் ஆகஸ்ட் 2 வரை தங்கம் இறக்குமதி மீதான வரி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ரூ.10,040 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் இறக்குமதி மூலம் மொத்தம் ரூ.10,463 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மே 13 அன்று தங்கம் மற்றும் வெள்ளி மீதான மொத்த இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது.