
தமிழகத்தில் பொன்னி அரிசி கிலோ ரூ.80 ஆகவும், சீரகச்சம்பா ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ள நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அரிசி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடும் வறட்சியால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சில வியாபாரிகள் அரிசியைப் பதுக்கி வைத்து செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் குறுவைச் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் அரிசி விலை கிலோ ரூ.100-ஐ நெருங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.