
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில், 22 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் ஏறிய கரடி ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
கிலாட்ஸ்டோன் காட்டுப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 200 வோல்ட் மின்சாரம் பாய்ந்ததால் கரடி கம்பத்தின் உச்சியிலேயே உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கரடியை மீட்கப் போராடியும் பலனளிக்கவில்லை, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.