
ஜப்பானின் ஹன்ஷோ நகர் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதால் இபாரகி, ஷிபா மற்றும் சைடமா ஆகிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் லேசாக சேதமடைந்தன.
தலைநகர் டோக்கியோவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாயம் எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.