
ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா காமேனி, லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் பாதுகாப்பது ஈரானின் கடமை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான எந்தவொரு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையிலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதே முதல் நிபந்தனையாக இருக்கும் என அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 5 மாதங்களாக வளைகுடாவில் போர் நீடிக்கும் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவரத் தொடர்ந்து போரிடுவதே ஒரே வழி என ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.