
நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி 5,083 பேர் மாயமாகியுள்ளனர், இதில் ஆன்மீக யாத்திரை சென்ற இந்தியர்களும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் 12 பள்ளிகள் சேதமடைந்ததில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மாயமாகி உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.