
ஜப்பானில் தொடங்கும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தவிருந்த குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் தூரின் உபகரணங்கள் தாமதமாக வந்தடைவதால் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்குப் பதிலாக கபடி வீரர் பவன் செஹ்ராவத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகருடன் இணைந்து இந்திய அணியின் கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தடகள அணி வீரர்கள் ஜப்பான் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப டோக்கியோவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.