
தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா முன்னேறியுள்ளார்.
அரை இறுதியில் சக நாட்டு வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜை 21-13, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் அஷ்மிதா சாலிஹா வீழ்த்தினார்.
உலகத் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள அஷ்மிதா, இறுதிப் போட்டியில் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் கியான்சியை எதிர்கொள்கிறார்.