
தலைமைச் செயலகத்தில் நிர்வாக அலுவலக வசதிகள் செய்யும் பணிகளில் விதிமீறல் நடந்ததாக வெளியான செய்தியை தமிழக அரசு மறுத்துள்ளது.
இந்த பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில், அரசு விதிகளின்படி அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 18 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 1, 2026 என்றும், அன்றைய தினம் தகுதியான ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.