
காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளா திரும்பிய நடிகர் மம்மூட்டி, வழி தெரியாமல் தவித்தபோது பாண்டியன் என்ற ரசிகர் 10 கி.மீ தூரம் பைக்கில் வழிகாட்டி உதவினார்.
அதிகாலை 3:30 மணிக்கு பெட்ரோல் பங்க்கில் மம்மூட்டியைக் கண்ட பாண்டியன், கூகுள் மேப்பிற்குத் தெரியாத குறுக்கு வழிகள் வழியாக காரை நெடுஞ்சாலை வரை அழைத்துச் சென்றார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் சமூக வலைதளத்தில் பகிர, மம்மூட்டி அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.