
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அவரை விசாரணைக்குப் பின் விடுவித்தது.
தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதிக்கு ஆதரவாக சுமார் 20,000 தொண்டர்கள் தஞ்சையிலும், 10,000 பேர் சென்னை விமான நிலையத்திலும் திரண்டனர்.
இந்தக் கைது நடவடிக்கையால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், உதயநிதிக்கு செயல்தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்துள்ளது.