
சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள அபேயி நகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த மோதலில் 82 பேர் படுகாயமடைந்துள்ளதால் அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இரு நாடுகளும் உரிமை கோரும் இந்த அபேயி நகரம் ஐ.நா. கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.