
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு விடுதி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் விடுதி ஊழியர் ராதிகா மற்றும் ரகுபதி கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு விடுதி ஊழியர் ராதிகா, ரகுபதி மற்றும் இரண்டு மாணவிகளுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
மாணவிகள் பெற்றோரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.