
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், மக்களின் ஸ்மார்ட்போன் கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மூலம் தகவல்களைத் திரட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பயனர்களின் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் மூன்றாம் தரப்பினருக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதால், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொலைபேசி பயன்பாட்டைத் தவிர்த்து வருகின்றனர்.
ஐபோன்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் கேமராக்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் பயனர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற கேள்விகள் ஆய்வுகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.