
ஈரான் துறைமுக முற்றுகையை மீறிச் சென்ற 'எம்.வி. வேலா நோவா' என்ற பனாமா நாட்டு கப்பலின் என்ஜின் அறையை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு அறிக்கையின்படி, இதுவரை 55 வர்த்தகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
அரபிக்கடல் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.