
அண்டார்டிகாவில் 2021 முதல் 2023 வரையிலான 22 மாத காலகட்டத்தில் தற்காலிகமாக 695 பில்லியன் டன் பனி அதிகரித்துள்ளதாக சீன அறிவியல் அகாடமி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் சந்திக்கும் வெப்பமண்டல கடல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண வெப்பம் காரணமாக 'வளிமண்டல ஆறுகள்' மூலம் ஈரப்பதம் அண்டார்டிகாவை நோக்கி திருப்பப்பட்டது.
இந்த பனி அதிகரிப்பு உலக கடல் மட்ட உயர்வை வருடத்திற்கு 0.3 மில்லிமீட்டர் என்ற அளவில் தற்காலிகமாக குறைத்துள்ளதே தவிர, புவி வெப்பமயமாதலின் ஆபத்து இன்னும் குறையவில்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.