
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் 80 சுற்றுலாப் பயணிகளைப் பத்திரமாக மீட்டனர், இருப்பினும் ஒருவர் இன்னும் மாயமாகியுள்ளதால் தேடுதல் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
வெள்ளத்தால் முக்கிய குடிநீர் குழாய்கள் மற்றும் மரப் பாலங்கள் சேதமடைந்துள்ளதால், பூங்காவின் குறிப்பிட்ட பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.