
வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு முறை மூலம் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
அதிபர் முகமது ஷஹாபுதீன் உடல்நலக்குறைவால் ராஜினாமா செய்த நிலையில், 349 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொண்டுள்ள ஆளும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.