
சீனப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியைத் தவிர்க்க, இந்தியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக மறு ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
2025-ஆம் ஆண்டில் மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் வழியாக சுமார் 6.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்கள் அமெரிக்காவுக்கு வந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக முறைகேட்டைத் தடுக்க, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து 'டிடெக்டிவ் பார்டர்' என்ற செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படுகிறது.