
பிலிப்பைன்ஸில் தலைநகர் மணிலாவிலிருந்து கொரோன் பகுதிக்குச் சென்ற 'எம்வி ஜூன் ஆஸ்டர்' என்ற சொகுசு கப்பலில் நடுக்கடலில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
117 பயணிகள் மற்றும் 17 ஊழியர்கள் என மொத்தம் 134 பேருடன் சென்ற இந்தக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் கடலில் குதித்த நிலையில் 80-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
கப்பலின் கீழ்த்தளப் பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டதாக உயிர் தப்பியவர் தெரிவித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.