
சென்னை காட்டாங்குளத்தூர் அருகே அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் பைக் மீது மோதிய விபத்தில் இறையன்பு என்ற 26 வயது இளைஞர் உயிரிழந்தார்.
சமூக நலத்துறை அமைச்சரான ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் சென்ற நிலையில், அவரைப் பின்தொடர்ந்து வந்த அவரது சொந்த காரே இந்த விபத்தை ஏற்படுத்தியது.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அமைச்சரின் காரைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.