
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் துணிச்சலுடன் குரல் கொடுத்த தியாகி என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சாதி வேறுபாடுகள் இல்லாத, அனைவருக்கும் சம உரிமையும் வாய்ப்பும் கிடைக்கும் வலிமையான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.