
சூப்பர் எல் நினோ தாக்கத்தால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழை காலத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 2.75 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 29.6 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளதால், நவம்பர் மாதத்திற்குள் சூப்பர் எல் நினோ உருவாவது உறுதியாகியுள்ளது.
வரலாற்று ரீதியாக 2015 மற்றும் 1997 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை விட இது தீவிரமாக இருக்கலாம் என்பதால், அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.