
ஆகஸ்ட் 19 முதல் 21 வரையிலான 60 மணி நேரத்தில், துருக்கி விமானப்படையின் சி-130 சரக்கு விமானங்கள் பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் மஸ்ரூர் தளங்களில் தரையிறங்கியுள்ளன.
பாகிஸ்தான் தனது வான் பாதுகாப்பு மற்றும் ட்ரோன் படைகளை நவீனப்படுத்த, துருக்கியிடமிருந்து அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளைப் பெற்றிருக்கலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேராக்டர் டிபி2 ரக ட்ரோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ராணுவ நவீனமயமாக்கலுக்கும் இந்த சரக்குகள் பயன்படுத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது.