
ஐபிஎல் தொடரில் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதிமுறையைத் தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்து 10 அணிகளின் நிர்வாகத்திடம் பிசிசிஐ கருத்து கேட்டுள்ளது.
இந்த விதிமுறையால் பந்துவீச்சாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சச்சின், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விதியை நீக்க வலியுறுத்தியுள்ளனர்.
அணிகள் வழங்கிய கருத்துகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான விதிமுறை குறித்த இறுதி முடிவை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.