
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு தற்போது வழங்கப்படும் ரூ.8,000 கடன் தொகையை, ரூ.10,000 ஆக உயர்த்த கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.
தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,19,600 ஆக உயர்ந்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட இந்த கடன் வரம்பு உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்புதல் வரும் வாரம் நடைபெற உள்ள கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் அளிக்கப்பட உள்ளது.