
கோவை மாவட்டம் அன்னூரில் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அடிக்கப்பட்ட கொசு மருந்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 60 வயதைக் கடந்த மோகன் என்ற ஆட்டோ ஓட்டுநரும், ராணி என்ற பெண்ணும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்கும் பணியைச் சரியாகக் கையாளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.