
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ள நிலையில், 18 முதல் 35 வயதுடையவர்களிடையே தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதோடு, மாணவர்களின் சம்மதத்துடன் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.