
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றதாக கீர்த்தனா, காவியா மற்றும் நிஷ்மா ஆகிய 3 பெண் ஆசிரியைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
‘ஆபரேஷன் துபான்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில், கீர்த்தனா சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் இடைத்தரகராகச் செயல்பட்டதும், நிஷ்மா ஆன்லைன் மூலம் லொகேஷன் அனுப்பி போதைப்பொருள் விற்றதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஆசிரியைகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நெட்வொர்க்கில் மேலும் சில ஆசிரியர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.