
பிரதமர் மோடி நாளை மறுதினம் (ஆகஸ்ட் 29) உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாகச் செல்கிறார்.
உஸ்பெகிஸ்தானில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இந்த உச்சிமாநாட்டில் மாறிவரும் தற்போதைய பாதுகாப்புச் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.