
பாஜக தேசிய மகளிரணி தலைவராக 6 ஆண்டுகளாக இருந்த வானதி சீனிவாசன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமார் செளத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தேசிய அளவிலான புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நீண்ட காலம் வகித்த தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, புதிய நிர்வாக மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.