
மத்திய அரசு ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்டத்தை திரும்பப் பெறுவது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஓய்வூதியர்கள் 3 நாள் போராட அறிவித்துள்ளனர்.
சென்னையில் நாளை தர்ணா நடைபெறுவதுடன், நவம்பர் 25-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் 5 ஆயிரம் ஓய்வூதியர்கள் கலந்துகொள்ளும் பேரணியும் நடத்தப்பட உள்ளது.
பாதுகாத்துறை ஓய்வூதியர்கள் 3 லட்சம் பேர் உள்பட இந்தியாவில் மொத்தம் 69 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர் என சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.