
விழுப்புரம் மாவட்டம் நடுவனந்தல் கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடையை அகற்ற மூன்று நாட்கள் அவகாசம் தருமாறு சி.வி.சண்முகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட நிலையில், அங்கு கூடியிருந்த மதுப்பிரியர்கள் கடை தேவை என முழக்கமிட்டனர்.
மதுப்பிரியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.